Editorial / 2024 ஜனவரி 10 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஹஸ்பர்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று (10) காலை 6.30 மணியளவில் டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய உனைதீன் ரபாய்தீன் என்பவரை இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
ஏழுபுளிடியாளியில் வசித்து வந்த இவர், தனது மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைட்டுக்குச் சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வந்து ஐந்து நாட்களேயான நிலையில் , இருவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், சில வாய் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வந்த மனைவி தனது கணவனுடன் அன்புடன் வாழ விருப்பமில்லை என்ன கூறியுள்ளார்.
இதன் காரணமாக மனம் சோர்வடைந்த கணவன், வெடித்து செத்துப் போவேன் என பலரிடம் கூறியுள்ளார்.
கூறியபடியே இன்று (10) காலை 6.30க்கு தனது இடுப்பில் வெடிக்கும் டைனமைன்ட் வெடிப்பொருளைக் கட்டிக் கொண்டு வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம், ஏழு புளியடி மேல் குடியேற்ற கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago