2025 மே 19, திங்கட்கிழமை

தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தியவருக்கு பொலிஸ் பிணை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குரங்குபாஞ்சான் குளத்தில், தடை செய்யப்பட்ட வீச்சு வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நபரொருவரை, நேற்றுப் புதன்கிழமை (03) கைதுசெய்து, பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அயிலடி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரை செய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும்  வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X