Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 17 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்
2018ஆம் வருடத்துக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி மதியம் 12 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்புக் கடிதங்கள் உரிய திணைக்களத் தலைவர்களுக்கு தபாலில் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், 20ஆம் திகதி மதியம் 2 மணிக்கு நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தற்போது தவிர்க்கமுடியாத காரணத்தால் 2 மணி, நண்பகல் 12 மணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.
கூட்டத்துக்கான அழைப்புக் கடிதங்கள் எனவே விடுக்கப்பட்டவர்கள் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2 மணியைக் கருத்திற்கொள்ளாது, அதேதினம் நண்பகல் 12 மணிக்கு வருமாறு, மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
2 hours ago
9 hours ago