A.K.M. Ramzy / 2020 மே 07 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
Covid-19 தொற்றுத் தாக்கத்தின் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு
சட்டத்தினால் தங்களுடைய நாளாந்த தொழிலை செய்ய முடியாமல் பொருளாதார பாதிப்படைந்த திருகோணமலை, கன்னியா கிராமத்தை சேர்ந்த 120
குடும்பங்களுக்கு ரூ. 2.104 பெறுமதியான உலருணவுப் பொதிகளைக் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியா கிராம அபிவிருத்திசங்கத்தின் வேண்டு கோளுக்கமைய கிராம சேவையாளர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரின்
உறுதிப்படுத்தலுடனும் பிரதேச செயலாளரிக்கான தெரியப்படுத்தலுடனும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .