2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

திருமலை மாவட்ட இணைத்தலைவராக சம்பந்தன்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களில்; ஒருவராக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரியொருவர், தெரிவித்தார்.  

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .