Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் தோப்பூர், மூதூர், கங்குவேலி உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கி ன்றன.
தனியார் நெல் விற்பனையாளர்கள் நெல்லை கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கீரி சம்பா ஒரு மூடை 2,650 முதல் 2,800 ரூபாயாகவும் நாடு ஒரு மூடை 2,400 ரூபாய் அளவிலும் விலை போவதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவடை கூலியாக ஏக்கரொன்றுக்கு 8,000 ரூபாய் வரை செலவிடப்படுகின்றன.
நெல்லின் விலை கடந்த போகத்தை விட, இம்முறை இங்கு குறைந்துள்ளதாக, பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
53 minute ago