2026 மார்ச் 23, திங்கட்கிழமை

நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரங்களை திருடியவர் விளக்கமறியலில்

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, நாச்சிக்குடா பகுதியில் நீர் இறைக்கும் மோட்டார் இயந்தரம் இரண்டினை திருடிய  ஒருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நீதிவான் ஹயான் மீ ஹககே இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தினை திருடி தம் வசம்  வைத்திருந்த குறித்த நபரை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(06) கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரை பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே,இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .