2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

திருகோணமலை, அக்போபுர பிரதேசத்தில்  எட்டரைக் கிலோகிராம் பன்றி இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்;டின் பேரில்; 29 வயதுடைய ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (10) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கந்தளாய் பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்த பன்றி இறைச்சியை, அக்போபுர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இச்சந்தேக நபர் மறைத்து வைத்திருந்துள்ளார். இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்துக்குச் சென்று பன்றி இறைச்சியுடன் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  
சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இரத்தக்கறை படிந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .