2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பயிற்றப்படாத ஆங்கில ஆசிரியர்களுக்கு செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிழக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற பயிற்றப்படாத ஆங்கில ஆசிரியர்களுக்கான 04 நாள் வதிவிடச் செயலமர்வை நடத்துவதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதிவரை திருகோணமலை, துளசிபுரத்திலுள்ள மனித வள அபிவிருத்தி நிலையத்தில் இந்தச் செயலமர்வு நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் கடிதம் மூலம் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

அக்கடிதத்தில், 'ஏற்கெனவே வலயக் கல்வி அலுவலகங்களினால் தெரிவுசெய்யப்பட்டு, மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலின் பிரகாரமுள்ள ஆசிரியர்கள்; இந்தச் செயலமர்வில்; பங்குபற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது வதிவிடப் பயிற்சிநெறியாக இருப்பதால், உணவு மற்றும் தங்குமிட வசதிகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி மாலை 026- 2226928 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு ஆசிரியர்கள் தங்கள் வரவை உறுதிப்படுத்தவேண்டும்.

இந்த செயலமர்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் அவசியமாக பங்குபற்றவேண்டும். தவிர்க்கமுடியாத காரணத்தினால் பங்குபற்றமுடியாத ஆசிரியர்கள் தங்களின் வரவின்மையை மாகாண ஆங்கில உதவி கல்விப் பணிப்பாளருடன் 071-2470315 என்ற தொலைபேசி இலக்கம் மூலமாக அறிவிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

2 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 5

மன்னிப்பு

2 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 3