Janu / 2023 ஜூன் 06 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை வெருகல் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வட்டுவான் வித்தியாலயம்,திருவள்ளுவர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது இன்று (06) வெருகல் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றதுடன் இதனை திருகோணமலை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் பரமேஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக உலக சுகாதார ஸ்தாபனத்தில் கடமையாற்றும் குணாளன் என்பவரின் முயற்சியின் பயனாக மறைந்த சுரேஸ் குமாரின் நினைவாக கந்தையா தொண்டு நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சுமார் 47 மாணவ மாணவிகளுக்காக குறித்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.




9 hours ago
24 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
24 Feb 2026