Editorial / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்
மூதூர், பாலைநகர் பகுதியில் மணல் ஏற்றுவதற்காக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் வேறு இடத்தில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் இருவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (02) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், உழவு இயந்திரங்கள் இரண்டு அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சநதேகநபர்கள் இருவரும் உழவு இயந்திரங்கள் சகிதம், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சூரங்கல், குட்டிக்கராச்சி பகுதிகளைச் சேர்ந்த 24, 20 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை, பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்றத்தில் நாளை (04) ஆஐர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago