2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மது அருந்தியவருக்கு அபராதம்

Niroshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                 

பொது இடத்தில் மதுபானம் அருந்திய ஒருவருக்கு கந்தளாய் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க நேற்று திங்கட்கிழமை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

கந்தளாய் வான்எல பகுதியைச் சேர்ந்த சாந்த குமார (வயது 49) என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை(08) கந்தளாய் நகரின் பொது இடமொன்றில் பகல் வேளையில் மதுபானம் குறித்த நபர் குடித்துக்கொண்டிருந்தபோது,பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது பத்தாயஜரம் ரூபாய் அபராதமும் அபராத தொகைணை செலுத்த தவறும் பட்சத்தில் மூன்று மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .