2026 மார்ச் 23, திங்கட்கிழமை

மீனவரின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை, மூதூர் மகாவலி ஆற்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (08) மீன்பிடிப்பதற்குச் சென்ற மல்லிகைத்தீவு, பெருவெளியைச் சேர்ந்த மதுரவீரன் பேரின்பநாயகம் (வயது 32) என்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போன நிலையில் இன்று புதன்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மீன் பிடிக்கச் சென்ற இவர், இரவாகியும் வீடு வராமை தொடர்பில் மூதூர் பொலிஸாருக்கும் அயலவர்களுக்கும்  அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பிரதேச மக்கள் பலரும் மகாவலி ஆற்றில் தேடியபோது, இவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .