2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மான் இறைச்சி வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

ஒரு கிலோகிராம் மான் இறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க உத்தரவிட்டார்.

திருகோணமலை, சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை (13) 52 வயதுடைய இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

இச்சந்தேக நபர் மான் இறைச்சி விற்பனையில் ஈடுபடுவதாக  கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவரின் வீட்டுக்குச் சென்று  சோதனை மேற்கொண்டபோது, மான் இறைச்சி இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .