2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவ்லக்கடவெல கிராமத்தில் இன்று புதன்கிழமை  மின்னல் தாக்கி  50 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இக்கிராமத்தில் இன்றையதினம் மழை பெய்துவருகின்றது. இவ்வேளையில், வயலில் இப்பெண் வேலை செய்துவிட்டு கணவருக்கு அலைபேசியூடாக அழைப்பை மேற்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்குள்ளானார்.

இந்நிலையில், இவரை கோமரங்கடவெல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .