Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார், வடமலை ராஜ்குமார்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேறிய 365 குடும்பங்களுக்கு தலா 10.000 ரூபாய்; பெறுமதியான உபகரணங்களை கிழக்கு மாகாண கல்வி கலாசார மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி வழங்கி வைத்தார்.
கிழக்கு மாகாண கல்வி கலாசார மீள்குடியேற்ற அமைச்சு நிதியில் இருந்தே இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை சம்பூரில் நடைபெற்ற பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனும் கலந்து கொண்டார்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒற்றைச்சில்லுவண்டி(வீல்பரோ) , கோடரி, கத்தி, மண்வெட்டி, அலவாங்கு போன்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago