2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞர் பலி

அப்துல்சலாம் யாசீம்   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சேருநுவர, லங்கா பட்டினம் பிரதான வீதி, வாழைத்தோட்டப் பகுதியில் நேற்று முன்தினம் (17) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெருகல், மாவடிச்சேனையைச் சேர்ந்த தங்கராசா விஜிகரன் ( 24 வயது) எனும் இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இவ்விபத்தில் சேனையூரைச் சேர்ந்த கனகராசா வசந்தகுமார் (24 வயது) எனும் இளைஞன் காயங்களுக்குள்ளான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை  இழந்து, மின்கம்பத்துடன் மோதியமையாலேயே விபத்துச் சம்பவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X