அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜனவரி 27 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - புத்தளம் பிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர், இன்று (27) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், மஹதிவுல்வெவ பகுதியைச்சேர்ந்த கே.ராஐா திஸாநாயக்க (51வயது) எனத் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
சில்லறைக் கடைக்கு பொருட்களை வாங்குவதற்காக ஹொரவ்பொத்தானை சென்று வருகை தந்து, வீட்டுக்குச் செல்வதற்காக வேண்டி வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த போது, அவர் நின்று கொண்டிருந்த இடத்துக்கு முன்னால் முச்சக்கர வண்டியொன்று திருப்ப முற்பட்டுள்ளது.
அவ்வேளை பிரதான வீதியால் வந்த லொறி, முச்சக்கர வண்டியை மோதியதில் வீதியோரத்தில் நின்றவரை, முச்சக்கர வண்டி மோதியமையால், இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய இரண்டு வாகன சாரதிகளையும் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், திருகோணமலை பொது வைத்தியதாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago