Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் காவலரணைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூதூர் பிரதேச சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினர் எம்.ஐ.நெளபல்தீன், இன்று (20) நடைபெற்ற சபை அமர்வில் கலந்துகொண்டார்.
இவரை, திருகோணமலை சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அழைத்து வந்திதிருந்தனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில், மூதூர், பெரியபாலத்தில் கடந்த 11ஆம் திகதி இரவு 8 மணியளவில் நடைபெற்ற விபத்தில், ஆலிம் நகரில் வசித்து வந்த எம். மஹ்சூன் (வயது 28) என்பவர், ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய பின்னர் டிப்பர் வாகனத்தின் சாரதி, வாகனத்தை நிறுத்தாது, தொடர்ந்து ஓட்டிச்சென்றதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், பெரியபாலப் பகுதியில் ஒன்றுதிரண்டு டயர்களை எரித்ததோடு, மூதூர் த்திரி சி.டி (3CD) சந்தியிலுள்ள பொலிஸ் காவலரணையும் உடைத்தெறிந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலேயே, சந்தேகத்தின் பேரில் பிரதேச சபை உறுபினர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, நேற்று(19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago