2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

கந்தளாய் ஹபரண பிரதான வீதியின்  தல்கஸ்வெவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு முச்சக்கரவண்டியும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

தர்மக்குமார் (வயது 43),எச்.என்.திஸாநாயக்க (வயது 25) ஆகியோரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி வேன் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே எதிரே வந்த லொறியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .