2026 மார்ச் 23, திங்கட்கிழமை

விபத்தில் ஊடகவியலாளர் படுகாயம்

Niroshini   / 2015 நவம்பர் 19 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரும் திருகோணமலை மாவட்டத்தின் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான அப்துல் சலாம் யாசிம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகி மொறவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொறவெவ ரெட்டவெவவில் உள்ள அவரது வீட்டிலிருந்து திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த எருமை மாடுகளுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது,ஊடகவியலாளர் கொண்டு சென்ற மடிக்கணினி செயலிழந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .