2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2015 நவம்பர் 06 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தை இல்லாமல் செய்வோம் எனும் தொணிப் பொருளில் மூதூர்,கிளிவெட்டி பாரதிபுரம் வித்தியாலய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் மாணவர்களால் வீதி நாடகங்களும் இதன்போது அரங்கேற்றப்பட்டதோடு பாடல்களும் இடம்பெற்றன.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுவர்கள், 'இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்','துஸ்பிரயோகம் வேண்டாம் அன்புதான் எங்களுக்கு வேண்டும்','சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே','அன்பான சமூகமே எங்களை படிக்க விடுங்கள்', 'சிறுவர் துஸ்பிரயோகத்தை ஒழிப்போம்' போன்ற வாசங்கள் எழுதப்பட்ட கோஷங்களை ளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .