2025 மே 14, புதன்கிழமை

ஹெரோயினுடன் சிக்கிய பெண் கைது

Nirosh   / 2021 நவம்பர் 14 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து கிராம் ஹேரோயின் போதைபொருளை வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேகநபரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் நேற்று (13) உத்தரவிட்டார்.

திருகோணமலையைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்  ஹேரோயின் போதைபொருள் விற்பனை செய்து வருவதாக உப்புவெளி போதைபொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X