2026 மார்ச் 23, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2015 நவம்பர் 08 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, ரொட்டவெவ பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.10 மணியளவில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிலும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த எச்.நப்ரீஸ் (வயது 17),  என்.பாஸில் (வயது 20) ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு முன்னால் விளையாட்டாக மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .