2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வாய் பேசமுடியாத பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய கடற்படை வீரர் கைது

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 20 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தாபெந்திவௌ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடற்படை வீரர் ஒருவரை நேற்று புதன்கிழமை மொறவௌ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  


ஒரு பிள்ளையின் தாயாரான வாய் பேச முடியாத  பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அப்பெண்ணின் தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண் திருகோணமலை அரசினர் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 


You May Also Like

  Comments - 0

  • Mohanavasanthan Saturday, 22 January 2011 01:49 AM

    இது எல்லாம் ஒரு செய்தி என்று பிரசுரம் செய்கின்றீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .