Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 13 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு மக்களுக்கான நிவாரணப் பொருள்களை கிழக்கு மாகாணசபை நிவாரண வழங்கி வைத்துள்ளது.
கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அனவர் ஆகியோர் இவ் நிவாரணப் பொருள்களை நேற்று சனிக்கிழமை வழங்கி வைத்தனர்.
பெரியகுளம் முதல் கோபாலபுரம் வரையான பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கும் வாழையூற்று முதல் சலப்பையாறு வரையான பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 850 குடும்பங்களுக்கும் இரணைக்குணி முதல் புடவைக்கட்டு வரையான பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 450 குடும்பங்களுக்கும் திரியாய் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 650 குடும்பங்களுக்கும் புல்மோட்டையில் 4 கிராமசேவகர் பிரிவுகளில் 800 குடும்பங்களுக்கும் இவ்நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 300 ரூபாய் பெறுமதியான பொதிகள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் அ.உமாமகேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் கா.கணேஸ்வரன், மற்றும் அந்த அந்த பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago