2025 ஜூலை 05, சனிக்கிழமை

மியன்மார் நாட்டு மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் கையளிப்பு

Super User   / 2011 ஏப்ரல் 25 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம், எஸ்.எஸ்.குமார்)

மியன்மார் நாட்டு மீனவர்கள் மூவரையும் கடற்படை அதிகாரிகள் இன்று  திங்கட்கிழமை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்கள் மூங்கில் மரத்தினால் செய்யப்பட்ட படகு ஒன்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற போது காற்றினால் அடித்து செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி திருமலை கொட்பேயிலிருந்து சென்ற மீனவர்களுக்கு கடலில் சூரியன் ஒளி படக்கூடிய கண்ணாடியை ஆழ்கடலில் இருந்து வெளிச்சம் காட்டிய வேளை இவர்களை மீட்பதற்காக மீனவர்கள் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

 துறைமுக பொலிஸார் மூவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .