2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருமலையில் 4 கைதிகள் தப்பியோட்டம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து நான்கு சிறைக்கைதிகள் நேற்றிரவு தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தர்மகுமார், ஜெஸ்ரின், சுரேஷ்குமார், அலி ஆகிய சிறைக்கைதிகளே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் தப்பியோடியுள்ளனர்.

சிறைச்சாலையின் பின்புறமாகவுள்ள யன்னலை உடைத்துக்கொண்டு வெளியில் சென்ற மேற்படி சிறைக்கைதிகள், மதிலின் மேல் போர்வையை தொங்கவிட்டு அதன் மூலம் தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடியுள்ள இந்த நான்கு பேரையும் உடனடியாக கைதுசெய்யுமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .