2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிண்ணியாவில் நிறைவான இல்லம் வளமான தாயகம் வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)
 
அரசாங்கம் ஆரம்பித்துள்ள 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப்பொருளிலான திவி நெகும திட்டம் தற்போது கிண்ணியா பிரதேசத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
 
இத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 31 கிராம சேவகர் பிரிவிலும் 31 ஆயிரம் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குத் தேவையான தொழில்சார் மூலப்பொருட்கள் வழங்கப்படுகின்றன
 
வீட்டுத் தோட்டத்துக்கு 808 பயனாளிகளும் கால் நடைக்கு 1671 பயனாளிகளும் மீன்பிடிக்கு 333 பயனாளிகளும் சிறுகைத்தொழிலுக்கு 288 பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு தெரிவு செய்யப்பட்ட 808 பயனாளிகளுக்கும் விதைகளும் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .