2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு மகப்பேற்று நிபுணர் ஒருவர் நியமனம்

Super User   / 2011 மே 03 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு மகப்பேற்று நிபுணர் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை முதல் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா தள வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர் ஒருவர் இன்மையால் இங்கு அனுமதிக்கப்படும் கர்ப்பணித்தாய்மார்கள் மகப்பேற்றுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கே அனுப்பிவைக்கப்பட்டு வந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X