2025 ஜூலை 05, சனிக்கிழமை

அகதிய்யா இடைநிலைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ்

Menaka Mookandi   / 2011 மே 12 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)
 
திருகோணமலை அல்.ஹுலூர் அகதிய்யா பாடசாலையின் 2010ஆம் ஆண்டுக்கான அகதிய்யா இடைநிலைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் நடைபெற்றது
 
இப்பாடசாலையில் இருந்து குறித்த பரீட்சைக்குத் தோற்றிய 22 மாணவர்களில் 18 மாணவர்கள் சித்தியடைந்து சான்திதழ் பெறத் தகுதி பெற்றிருந்தனர்.
 
அல் ஹுலூர் அகதிய்யா பாடசாலையின் அதிபர் மௌலவி ஏ.சி.நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் திருகோணமலை மாவட்ட அகதிய்யா பாடசாலைகளின் சம்மேளனச் செயலாளர் மௌலவி எம்.வை.ஹதியத்துள்ளா பிரதம விருந்தினராகவும் விபுலானந்தா கல்லூரி ஆசிரியை திருமதி சந்திரதாசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .