2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

திருகோணமலையில் சாகித்திய விழா

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)
 
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையினால் 2011ஆம் ஆண்டுக்குரிய சாகித்திய விழா நேற்று வியாழக்கிழமை மாலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின்  கலையரங்கத்தில் நடத்தப்பட்டது.

திருகோணமலை அரசாங்க அதிபர் ரஞ்சித் சில்வா முதன்மை அதிதியாக இதில் கலந்து கொண்டார். பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் இந்நிகழ்வுக்கு தலைமை  வகித்தார்.

மூத்த சிற்பக்கலைஞர்  சிவஸ்ரீ மு.பத்மநாப சர்மா, ஓவியக்கலைஞர் டயமன் த.சில்வா,  மூத்த கல்விமான் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் அதிபருமான எஸ்.எம்.எம்.அலி ஆகியோர் விழாவில் அரசாங்க அதிபரால் பொன்னாடை
போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .