2025 மே 07, புதன்கிழமை

பெண்களுக்கான சுகாதாரக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை எகெட் கரித்தாஸ் சுகாதார உளசமூகப் பிரிவு, பெண்களுக்கான  சுகாதார கருத்தரங்கை நேற்று வியாழக்கிழமை நடத்தியது.

நீரழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், புற்றுநோய், சுவாசநோய்  போன்ற நோய்கள் தொடர்பிலும் உடற்பருமன் சுட்டி பற்றிய விபரங்களையும் செய்முறையாகவும் வீடியோ மூலமும்   திருகோணமலை தொற்றல்லாத நோய்களுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி திருமதி.வு.ஜெயந்தி  விளக்கமளித்தார்.  

எகெட் கரித்தாஸ் சுகாதார உளசமூகப் பிரிவின் இணைப்பாளர் கு.பிரகலாதன்   தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு.ஜி.ஏ.பிரான்சிஸ் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X