2025 மே 07, புதன்கிழமை

முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 25 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)
கிண்ணியா பிரதேசத்திலிருந்து புதிய ஆண்டில் அரச பாடசாலைகளில் இணையும் 96 முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
கிண்ணியா வலய கல்வி அலுவலகமும், கிண்;ணியா விஷன் அமைப்பினரும் இந்நிகழ்லை ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்பள்ளி பாடசாலை உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.என்.எம்.சமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், கிண்ணியா விஷன் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். சைபுள்ளா, மற்றும் கிண்ணியா விஷன் தலைவைர் ஏ.ஆர்.உபைத்துல்லா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆh.எம்.பாறூக், மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X