Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாட்டத்தில் கணவனை இழந்த குடும்பத்தினர்களுக்கு சுய தொழில் வாழ்வாதாரம் தொடர்பான கருத்தரங்கொன்று நேற்று புதன்கிழமை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சர்வ மதப் பேரவையினால் யுத்தத்தின் பின்னர் மனிதாபிமான நடவடிக்கையினை மேற்கொள்ளும் பொருட்டு இக்கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் திருகோணமலை வர்த்தக சம்மேளனத்தின் பெண்கள் அமைப்பு தலைவி மாலினி, சம்மேளனத்தின் உறுப்பினர் எம்.றிஸ்மியா, ஜம் இய்யத்துல் உலாமா சபைத்தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.ரீ.எம். ஆர்பீன், சர்வ மத திருகோணமலை மாவட்ட செயலாளர் ஏ.எல்.றபாய்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Jun 2025
29 Jun 2025