2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சர்வோதைய நிறுவனத்தின் ஏற்பாட்டில் புதுவருட நிகழ்வு

Kogilavani   / 2012 ஜனவரி 01 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரமன்)

திருகோணமலை மாவட்ட சர்வோதைய நிறுவனத்தின் 2012 புதுவருட நிகழ்வு இன்று காலை ஸ்ரீ மாதுமை அம்பாள் வித்தியாலய அரங்கில் நடைபெற்றது.

நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் வே.ஜீவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரத்துறை மற்றும் சமூக சேவைகள், கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சர்வோதைய பயிலுநர்களுக்கும் மாணவர்களுக்கும் புதுவருட அன்பளிப்புகளை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில், சர்வோதைய நிறுவனத்தின் பயிலுனர்கள், மும்மத தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, நிறுவனத்தின் பயிலுனர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X