2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சம்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 04 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை, மூதூர் கிழக்கின் சம்பூர்ப் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக  சீதனவெளிப் பகுதியில்  56 வீடுகளை இலங்கை இராணுவத்தின் 22ஆவது படைப்பிரிவினர் நிர்மாணித்து வருகின்றனர்.

கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் ஆலோசனையின் பேரிலும்  திருகோணமலை  கட்டளையிடும் அதிகாரி தர்ஷன ஹெட்டியாராச்சியின் வழிநடத்தலிலும் இவ்வீடுகள நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில்  ஒருபகுதியினர் இவ்வீடுகளில் கூடிய விரைவில் குடியமர்த்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X