2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சாரணர் சங்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு திருமலையில் நடை பவணி

Super User   / 2012 ஜனவரி 07 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

இலங்கை சாரணர் சங்கத்தின் நூற்றாண்டை அனுஷ்டிக்கும் முகமாக திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம்  பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக  நடை பவணியொன்றினை இன்று சனிக்கிழமை திருகோணமலை நகரில் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் முழு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி சாரணர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை சாரணர் சங்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு தேசிய ரீதியில்  நடைபெற்ற முதலாவது நிகழ்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X