2025 மே 03, சனிக்கிழமை

கருமலையூற்று மற்றும் வெல்ல மணல் பிரதேச மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் விசேட கூட்டம்

Super User   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனங்குடா, கருமலையூற்று மற்றும் வெல்ல மணல் ஆகிய பிரதேச மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சீனங்குடா விமான படை கட்டளை தளபதி மற்றும் திருகோணமலை பட்டணமும் சுழல் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் வீச்சு வலை மூலம் மீன்பிடிப்பதற்கான அனுமதி விமான படையினரால் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்தார்.

கருமலையூற்று மற்றும் வெல்ல மணல் ஆகிய பிரதேசங்கள் விமான படையினரின் கட்டுப்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X