2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

குறைகேள் முறைப்பாட்டு முறைமை தொடர்பான பயிற்சி

Kogilavani   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் குறைகேள் முறைப்பாட்டு முறைமை தொடர்பான பயிற்சி ஒன்று நேற்று வியாழக்கிழமை குளக்கோட்டன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

திருகோணமலை தபால் கந்தோர் வீதியில் உள்ள குளக்கோட்டன் பயிற்சி நிலையத்தில் இப்பயிற்சி நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

புறநெகும திட்டத்தின் சமூக பாதுகாப்பு நிபுணர் எந்தரி அ.வேல்மாணிக்கம்,  தகவல் தொடர்பாடல் நிபுணர் எ.எஸ்.கௌரிபாலன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

பிரந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.குணநாதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

திருகோணமலையில் உள்ள 8 தமிழ் பிரதேச சபைகளினதும் 5 சிங்கள பிரதேச சபைகளினது செயலாளர்கள் இதில் கலந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X