2025 ஜூன் 28, சனிக்கிழமை

விவசாயத்தில் உயர்தொழில் நுட்பத்தை ஊக்குவிப்பது தொடர்பில் அறிவுறுத்தும் கூட்டம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

விவசாயத்தில் உயர்தொழில் நுட்பம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் விவசாயிகளுகு அறிவுறுத்தும் கூட்டம், கிண்ணியா நடுவூற்று கிராமத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், பிரதி விவசாய பணிப்பாளர் என்.குகதாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பழச்செய்கையில் எதிர்கோக்கப்படும் இடர்பாடுகள் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பீடைத்தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.ஹூஸைன் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
'நெற்செய்கை மூலம் கிடைக்கும் வருமானத்தை விட மறுவயல் பயிர் செய்கை, காய்கறி, பழவகை உற்பத்தி மூலம் கூடுதல் இலாபத்தை ஈட்டமுடியும்.

தற்போதைய உயர்தொழில் நுட்பங்களை பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும். கிழக்கு மாகாண விவசாய திணைக்களம் விவசாய உபகரணங்களை மானிய அடிப்படையில் வழங்கி வருவதுடன் தேவையான வழிகாட்டல்களையும் வழங்குகிறது. இந்நிலைமைகளை விவசாயிகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .