2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வடக்கு-கிழக்கு முதலமைச்சர்கள் சந்திப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 30 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் புதன்கிழமை மாலை திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில்; சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின் போது பல்வேறு விடையங்கள் பற்றி ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி வந்த அரச ஊழியர்கள் வடக்கு கிழக்கு இரண்டாக பிரிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரச ஊழியர்கள் வடமாகாணத்திற்கும் வடமாகாணத்தைச் சேர்ந்த அரச ஊழியர்கள் கிழக்கு மாகாணத்திலும் கடமையாற்றி வருகின்றனர்.

இவர்களை அவர்களது மாகாணத்திற்கு விடுவிப்பு செய்வது தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு யுத்தம் காரணமாக வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களது செந்த இடங்களில் குடியமர்த்தி  அவர்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் வடமாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து தற்போது மூதூர், பட்டித்திடல், மணற்சேணை ஆகிய நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் தழிழ் மக்களை மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் அவர்களது சொந்த இடங்களுக்கு விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் வடமாகாண முதலமைச்சரிடம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .