2025 ஜூன் 23, திங்கட்கிழமை

உப்பளம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 09 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னக்கரச்சை களப்பில்  உப்பளம் ஆரம்பிப்பதற்கு  கடந்த பல வருடங்களாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்த நிலையில்,  குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கும் உப்பள உரிமையாளர்களுக்கும் இடையில் கும்புறுப்பிட்டி கிராம பொதுக்கட்டடத்தில் கலந்துரையாடலொன்று   நேற்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது,

குச்சவெளி பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ்.அமலினி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கும்புறுப்பிட்டி  வடக்கு மற்றும்  கிழக்கு, நாவற்;சோலை, இறக்ககண்டி ஆகிய கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள், சிறுகடல் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்தோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பொதுமக்கள்,  'ஏற்கெனவே குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில்; பெரியகரச்சை களப்பு  தனியார்; உப்பளக் கம்பனியொன்றுக்கு வழங்கப்பட்டது. அந்த நிலையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது, ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில்வாய்ப்பு  தருவதாக வாக்குறுதி வழங்கி அக்கம்பனியினால் எமக்கு எந்தப் பயனும் இல்லை. 650 ஏக்கர் மட்டுமே தமக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  அவர்கள் 1,000 இற்கும் அதிகமாக நிலங்களை எடுத்துள்ளனர்.

40 பேர் மட்டுமே இக்கம்பனியில் பணியாற்றுகிறார்கள்.  இவ்வாறான நிலையில் மேலும் நிறுவனத்துக்கு  சின்னக்கரச்சை களப்பை  வழங்குவதன் மூலம் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்' எனத்; தெரிவித்தனர்.

இப்பகுதியில் உப்பளம்; அமையுமானால் நிலத்தடி நீர் உவர் தன்மையடையும். மேலும் கடல் உயிரினங்களான நண்டு, இறால் போன்றவற்றின் உற்பத்தி இல்லாது போகும். விவசாய காணிகள் பாதிக்கப்படும். கால்நடைகளுக்கு நீர் இல்லாது போகும். மேலும் பெரிய கரச்சையில் பாதிக்கபட்ட மீனவர்கள் சின்னக்கரச்சையில் தொழில் செய்கிறார்கள். அவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, சின்னக்கரச்சை உப்பளத்தை அவ்விடத்தில் நிறுவாது அம்மக்களின் பாரம்பரிய தொழிலை செய்ய அனுமதிக்குமாறு தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .