Suganthini Ratnam / 2015 ஜூலை 19 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் இரு குழுவினருக்கு இடையில் சனிக்கிழமை (18) இரவு ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்; இருவரை கைதுசெய்ததாக கந்தளாய்; பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபானம் அருந்திய நிலையில் மேற்படி இரு குழுவினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கைகலப்பில் ஈடுபட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago