2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

வாள், கத்தி சகிதம் சென்ற நால்வர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 26 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

வாள்; மற்றும் கத்தி சகிதம் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகக் கூறப்படும் நான்கு பேரை திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை (25) இரவு  கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து வாள், கத்தி மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த சந்தேக நபர்கள் 61, 58, 32, 37, வயதுகளை உடையவர்கள் என்றும் பொலிஸார் கூறினர்.

விறகுகளை வெட்டுவதற்கு  பயன்படுத்தும் கத்தி என்று சந்தேக  நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .