2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                          

திருகோணமலை, கந்தளாய்; பிரதேசத்திலுள்ள வீட்டு வளவொன்றில் கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (08) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த சந்தேக நபர் கஞ்சாச் செடிகளை வளர்த்து வருவதாக தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டு சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும், கந்தளாய் பிரதேசத்தில் நீண்டகாலமாக கஞ்சா விற்பனை செய்கின்றமை தொடர்பில் சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .