Editorial / 2017 ஜூன் 19 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் மாகாணம், பிட்டிகல பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்து இன்று காலை தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரின் சடலம், ஒலுவில கால்வாயிலிருந்து மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
தன்னைத் தாக்கியதாக, பிட்டிகலவை வசிப்பிடமாகக் கொண்ட இச்சந்தேகநபரின் மனைவி, பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டை அடுத்தே, குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்திருந்ததாக, பிட்டிகல பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .