2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

ஒரு பவுன் தங்கத்தின் விலை 400,000 ரூபாயாக அதிரடியாக அதிகரித்தது

Editorial   / 2025 ஒக்டோபர் 17 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில்,   24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சம் ரூபாயை இன்று (17) வௌ்ளிக்கிழமை கடந்துள்ளது. 

இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார்தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது வியாழக்கிழமையுடன் (16) ஒப்பிடும் போது இதன் விலை  15 ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளது. 

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 13 ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரித்து 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாக காணப்படுகிறது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .