2025 ஜூலை 19, சனிக்கிழமை

’நினைத்தவாறு செயற்படுவது நாட்டு மக்களையே பாதிக்கும்’

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் யாராவது தான்தோன்றிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்றால் அது நாட்டு மக்களையை பாதிக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், ஊடகங்களின் ஊடாகவே அதனை தான் அறிந்துகொண்டதாகவும் பொன்சேகா கூறியுள்ளார்.

நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினர்களை நீக்கி புதியவர்களை இணைத்துக்கொள்வது தனிப்பட்ட நபரினால் முன்னெடுக்கப்பட கூடாது  என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

களனியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X