2025 மே 15, வியாழக்கிழமை

ஹட்டன் பஸ் விபத்தில் 32 பேர் படுகாயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில், டிக்கோயா - வனராஜா பகுதியில் தனியார் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ், சீரற்ற காலநிலை காரணமாக, வீதியை விட்டு விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 18  மாணவர்கள்  மற்றும் 14 பயணிகள் டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இன்று பிற்பகல் 03 மணியவில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .